விஜய்யுடன் இளம் கிரிக்கெட் வீரர் கொடுத்த அசத்தல் போஸ்... வெறித்தனமான ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய தளபதி...!

First Published Nov 17, 2020, 7:37 PM IST

வருண் சக்ரவர்த்தியின் கையில் நடிகர் விஜய்யின் டாட்டூ குத்தப்பட்டிருப்பதைக் கண்டு தளபதி ரசிகர்கள் திக்குமுக்காடினர். 

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் 2020 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். தனது சுழற்பந்து வீச்சால் இந்த சீசனையே வேற லெவலுக்கு அதிர வைத்தார்.
undefined
ஐபிஎல் போட்டியில் தோனி உள்ளிட்ட பல முக்கிய வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் போட்டியில் சூறாவளியை சுழன்று அடித்த வருண் சக்ரவர்த்தியின் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டானது.
undefined
அதில் வருண் சக்ரவர்த்தியின் கையில் நடிகர் விஜய்யின் டாட்டூ குத்தப்பட்டிருப்பதைக் கண்டு தளபதி ரசிகர்கள் திக்குமுக்காடினர். அதேபோல் வருணும் தான் பெரிய தளபதி ஃபேன் என்பதை வெளிப்படுத்தினார்.
undefined
அதுமட்டுமின்றி ஒருமுறையாவது தளபதி விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார். தற்போது ஐபிஎல் தொடர் நிறைவடைந்த நிலையில், வருண் சக்ரவர்த்தியின் ஆசையும் நிறைவேறியுள்ளது.
undefined
அதாவது தளபதி விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் வருண் சக்ரவர்த்தி. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அவர், உள்ள வந்தா பவர் டி... அண்ணா யாரு தளபதி... என பதிவிட்டுள்ளார்.
undefined
இந்த போட்டோவை வருண் சோசியல் மீடியாவில் பகிர்ந்த சில நிமிடங்களிலே அது வைரலாகி விட்டது. அதுமட்டுமின்றி #VarunChakravarthy என்ற ஹேஷ்டேக்கையும் தளபதி ரசிகர்கள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
undefined
click me!