கொரோனா அச்சத்தில் விக்ரமின் 'கோப்ரா' படக்குழு..! அவசர அவரசமாக நடக்கும் பரிசோதனை..!

First Published Jan 31, 2021, 3:05 PM IST

நடிகர் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படப்பிடிப்பு நடந்த அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்போது படக்குழுவினர் அனைவரும் அவசர அவசரமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நடிகர் சீயான் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார்.
undefined
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்ததால், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர்.
undefined
இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக, 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
undefined
இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பணியில் இருந்த, 8 பேருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளதாம்.
undefined
இதனால், தற்போது 'கோப்ரா' படக்குழுவில் உள்ள அனைவரும் அவசர அவசரமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
undefined
பல்வேறு முன்னெச்சரிகைகளுடன் படப்பிடிப்பு மேற்கொண்டு வரும் நேரத்தில், எதோ ஒரு ரூபத்தில் கொரோனா திரையுலகினரை ஆட்டி வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
undefined
click me!