கடைசி நாளில் அஷ்வினை பார்த்து ஷிவாங்கி கேட்ட கேள்வி..! உணர்வு பொங்க வெளிப்படுத்திய பதிவு!

First Published Apr 10, 2021, 11:51 AM IST

விஜய் டிவியில், ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் கடைசி நாள் ஷூட்டிகை முடித்து விட்டு, உணர்வு பொங்க இந்த நிகழ்ச்சியை பற்றி பதிவிட்டுள்ளார் அஷ்வின். 
 

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக டி.ஆர்.பி -யோடு ஒளிபரப்பாகி வந்த, 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சி. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
undefined
'குக் வித் கோமாளி ' சீசன் 2 நிகழ்ச்சியின் பைனலில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, மற்றும் பவித்ரா லட்சுமி ஆகிய 5 பேர் மோதுகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் நிறைவடைந்தது குறித்து மிகவும் உணர்ச்சிவசமாக தன்னுடைய கருத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அஷ்வின்.
undefined
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ' குக் வித் கோமாளி இது ஒரு நிகழ்ச்சி அல்ல, குக் வித் ஃபேமிலி. மிக சிறந்த அனுபவம்! இந்த பயணம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என் நினைவுகளில் எப்போதும் பதிந்திருக்கும். என்னைப் போன்றவர்கள் கனவு மட்டுமே காண முடியும் என்பதை தாண்டி, தனக்கென ஒரு அங்கீகாரத்தை இந்நிகழ்ச்சி அளித்துள்ளது.
undefined
நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்கிற மனநிலைக்கு நான் இன்னும் வரவில்லை. எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நான் மற்ற அணைத்து வேலைகளையும் விட்டுவிட்டு இந்த அணியுடன் ஒரு நிமிடமானாலும் செலவிட ஓடி வந்துவிடுவேன். இதைவிட நான் என்ன கேட்க முடியும்! இணை போட்டியாளர்கள் மற்றும் ஜோடிகள் என அனைவருமே மிகச் சிறப்பானவர்கள். கேமரா மேன் முதல் எடிட்டர்கள் வரை நடுவர்கள் முதல் இயக்குநர் மற்றும் சேனல் வரை எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்தும்' என்று தெரிவித்திருந்தார்.
undefined
தன்னுடைய ரசிகர்கள் அனைவரும் மிக மிக அற்புதமானவர்கள். அன்பின் மற்றும் ஆதரவு கொடுத்து வருகிறீர்கள். நீங்கள் எங்களுக்காக செலவழித்த நேரத்திற்கு , வார்த்தைகள் போதாது. சல்யூட் !!!! இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஜோடிகளுக்கும் உங்கள் ஆதரவு என்றென்றும் தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
undefined
பின்னர் சிவாங்கி குறித்து கடைசியாக அஷ்வின் கூறுகியில்... நிச்சயமாக எனக்கும் ஷிவாங்கிக்கும் தனி சிறப்பு உண்டு. ஒரு போட்டியாளராக உணரவைத்தால்... என் வேடிக்கையான பக்கத்தை வெளியே கொண்டு வந்தாய். 'நீங்கள் என்னை மிஸ் செய்வீர்களா?' என்று கேட்டுக்கொண்டே இருந்தாய். அந்த கேள்விக்கு, ஆம் !! நான் மிகவும் மிஸ் உன்னை மிஸ் செய்வேன் என கூறியுள்ளார்.
undefined
click me!