மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, தங்களது மூத்த மகன் கலையரசன் 11-ம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும், அவர் தான் தற்போது தனுஷ் என பெயரை மாற்றிக்கொண்டு சினிமாவில் நடித்து வருவதாகவும், அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.