இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்நிலையில், கோமாளி பட வெற்றிக்கு பின் அவருக்கு தயாரிப்பாளர் பரிசாக கொடுத்த காரை அவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கோமாளி படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அவருக்கு புது கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
அந்த கார் இருந்தால் அதற்கு பெட்ரோல் போடவே நிறைய பணம் செலவாகும் என்பதால், அதனை திருப்பி கொடுத்து அந்த காருக்கான தொகையை தனக்கு பரிசாக கொடுத்தால், தான் அடுத்த படம் எடுக்கும் வரை அது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என கேட்டாராம் பிரதீப். அவர் கூறிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2-வில் ஜோதிகாவுக்கு பதில் இவரா..? சர்ச்சைக்குரிய நடிகையை சந்திரமுகியாக்கும் பி.வாசு!