அமலா பாலுடன் திருமணம் நடந்ததாக சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்ட விவகாரம்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

First Published Nov 3, 2020, 12:47 PM IST

இந்நிலையில் தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பரப்பியது தொடர்பாக பாடகர் பவ்னிந்தர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலா பால் மனு தாக்கல் செய்திருந்தார். 

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
undefined
அதன் பின்னர் படங்களில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக வதந்தி பரவியது.
undefined
இந்நிலையில் அமலா பாலுக்கும் பவ்னிந்தர் சிங்கிற்கும் திருமணம் நடந்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.
undefined
அந்த புகைப்படங்களை பவனீந்தர் சிங் தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டார் என்றும் அதன் பிறகு சில நிமிடங்களில் நீக்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
undefined
காட்டுத்தீ போல் பரவிய இந்த விவகாரத்தில் டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வேண்டுமென்றே பதிவிட்டதாகவும், அமலா பாலுக்கு 2வது திருமணம் நடந்துவிட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் அவருடைய மேனேஜர் விளக்கமளித்தார்.
undefined
இந்நிலையில் தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பரப்பியது தொடர்பாக பாடகர் பவ்னிந்தர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலா பால் மனு தாக்கல் செய்திருந்தார்.
undefined
அந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் பாடகர் பவ்னிந்தருக்கு எதிராக அமலா பால் வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
undefined
click me!