கத சொல்லப் போறோம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கல்யாண். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான குலேபகாவலி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் பேமஸ் ஆனார் கல்யாண். இப்படத்தில் பிரபுதேவா, ரேவதி, ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையடுத்து நடிகை ஜோதிகாவை வைத்து ஜாக்பாட் என்கிற காமெடி படத்தை இயக்கிய கல்யாண், தற்போது காஜல் அகர்வால் நடித்த கோஷ்டி மற்றும் ஜல்சா ஆகிய இரண்டு படங்களை இயக்கி உள்ளார். இதில் கோஷ்டி படம் ஷூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... தளபதி தந்தைக்கு இந்த நிலையா? ஹரித்துவாரில் ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ.சந்திரசேகர்! வைரலாகும் புகைப்படம்!