லாக்டவுனில் உதவிகளை வாரி வழங்கிய சோனு சூட்டுக்கு நேர்ந்த சோகம்?... ட்விட்டர் பதிவால் பதறிப்போன ரசிகர்கள்...!

First Published Apr 17, 2021, 2:45 PM IST

கொரோனா 2வது அலை தன்னுடைய கோரமுகத்தை காட்டி வரும் நிலையில், இந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளுக்கு உயிர் காக்கும் வகையில்  10 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்தார். 
 

அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.
undefined
அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
undefined
உதவி என கோரிக்கை வைக்கும் பலருக்கும் வேலை வாய்ப்பு, கணினி, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை, ஆன்லைன் கல்விக்கு இன்டர்நெட் இணைப்பு என கணக்கில் அடங்காத உதவிகளை வாரி வழங்கிய சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் அவருடைய பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி கவனித்தது.
undefined
இந்நிலையில் தன்னுடைய ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டேன். யாரும் கவலை அடைய வேண்டாம், இதனால் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதை தீர்க்க நான் இருப்பேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் சோனு சூட் பூரண நலம் பெற வேண்டும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
undefined
click me!