பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றிய ஆரி..! நின்று விளையாடி ரன்னர் ஆன பாலாஜி!

First Published Jan 17, 2021, 11:55 PM IST

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் என்கிற மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார் நடிகரும் , சமூக ஆர்வலருமான ஆரி. இரண்டாவது இடத்தை பாலாஜி கைப்பற்றியுள்ளார்.
 

இறுதி சுற்றில் இடம்பெற்ற, 6 போட்டியாளர்களில்... கேப்ரில்லா 5 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு வெளியே சென்றதால், மீதம் இருந்த 5 போட்டியாளர்கள் நின்று விளையாடி வந்தனர்.
undefined
இந்நிலையில் 5 ஆவது இடத்தை பிடித்த சோம் சேகரை , பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார்.
undefined
இவரை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவின் ரம்யா பாண்டியனையும், ரியோவை ஷெரினும் அழைத்து வந்தனர்.
undefined
மீதம் உள்ள ஆரி - பாலாஜியை அழைத்து வருவதற்காக... கமல் ஹாசனே உள்ள செல்கிறார். இடையில் பிக்பாஸ் இருவரிடமும் உங்களை கொண்டாட உலகமே காத்திருப்பதாக கூறி விடைபெறுவதாகவும், ஆரியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என வாழ்த்துக்களை கூறி விடைபெற்றார்.
undefined
உள்ளே வந்து சில நிமிடம் பாலா மற்றும் ஆரியிடம் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசும் கமல், நீங்கள் இருவருமே இவ்வளவு தூரம் வருவீர்கள் என நினைத்து பார்க்கவில்லை என்று கூறி, தான் திரையில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
undefined
பின்னர் ஆரி - பாலாஜி என இருவரும் கதர் உடைகளை மாற்றிவந்த பின், இருவரையும் வெளியே அழைத்து சென்றார். இவர்களுக்கு அமோக வரவேற்பும் கொடுக்கப்பட்டது.
undefined
அனைவரும் எதிர்பார்த்து கார்த்திக்கொண்டிருந்தது இந்த தருணம் தான் என கூற, ஆரி 5 ஆம் வகுப்பில் மட்டும் தான் முதலிடம் என்றும் அதன் பிறகு முதல் இடம் என்பது கனவாகவே இருந்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
undefined
பின்னர் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த நினைவுகளின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
undefined
பின்னர் பல்வேறு பில்டப்புகளுக்கு பின் ஒருவழியாக ஆரி, பிக்பாஸ் வின்னர் என்பதையும், பாலாஜி ரன்னர் என்பதையும் கமல்ஹாசன் அறிவித்தார். இருவருக்கும் சக போட்டியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்கள் வாழ்த்துக்களை பொழிந்ததையும் பார்க்க முடிந்தது.
undefined
click me!