என்னதான் ராஜூ டைட்டில் ஜெயிச்சாலும்.. சம்பள விஷயத்துல இவுங்கதான் டாப் - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்

First Published Jan 16, 2022, 5:28 PM IST

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இறுதிப்போட்டியில் உள்ள 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்றுடன் முடிய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இறுதி வாரத்தில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ராஜு பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார்.

பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-வது இடத்தையும் பிடிக்க. அமீர், நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர். நேற்றே இந்த பைனல் எபிசோடின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இன்று தான் அவை ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் உள்ள 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த 5 பேரில் குறைவான அளவு சம்பளம் வாங்குவது நிரூப் மற்றும் அமீர் தான். இவர்கள் இருவரும் இதுவரை பிரபலம் ஆகாதவர்கள் என்பதால் இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு ரூ.70 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில் 16 வாரங்களை நிறைவு செய்த நிரூப் மொத்தம் ரூ.11.20 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளாராம். அதேபோல் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர் 8 வாரங்களுக்கு ரூ.5.60 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் சீரியல்களில் நடித்து பிரபலமான பாவனிக்கு ஒரு வாரத்துக்கு ரூ.1.25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவர் 16 வாரத்துக்கு ரூ.20 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளாராம். 

அதேபோல் டைட்டில் வின்னரான ராஜூ பிக்பாஸுக்கு முன்னரே சில சீரியல்களிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலமானதால் அவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.24 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

என்னதான் ராஜு டைட்டில் வின்னராக இருந்தாலும், இந்த சீசனில் அவரைவிட அதிகம் சம்பளம் பெற்றது பிரியங்கா தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்ததால், இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 16 வாரத்துக்கு ரூ.32 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

click me!