இந்நிகழ்ச்சியில் தாமரை செல்வியுடன், சக போட்டியாளரான தாடி பாலாஜி பேசுகையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தால், அதை சம்பளத்தில் பிடித்து விடுவார்கள் எனக் கூறினார். இதைக்கேட்டு ஷாக் ஆன தாமரை, எனக்கு தான் இன்னும் சம்பளமே தரலயே என தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடிந்து 2 வாரத்துக்கு மேல் ஆகியும் சம்பளம் தராதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.