விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் தாமரைச் செல்வியுடன் சண்டை போட்டது, நிரூப் உடன் மோதலில் ஈடுபட்டது என பல்வேறு சர்ச்சைகளில் இவர் சிக்கினாலும், இறுதிப்போட்டி வரை முன்னேறி, டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். பிக்பாஸுக்கு பின்னர் அவர் தொடர்ந்து தனது தொகுப்பாளினி வேலையை செய்து வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விருது நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார் பிரியங்கா. அதில் இவரும், தீனாவும் சேர்ந்து பிரபலங்களுடன் செய்த ஃபன்னான சில வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு பிரியங்கா குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.