பிக்பாஸ் வீட்டில் அதிக நாள் இருந்து ரன்னராக மாறிய பாலாஜி, இரண்டாவது வாரத்தில் முதல் முதலாக வெளியேறிய போட்டியாளரான ரேகாவை விட மிக குறைவான சம்பளம் மட்டுமே பெற்றுள்ளதாகவும். ஆரி தான் அதிக தொகையோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்ற போட்டியாளர் என்கிற தகவல் சமூக வலைத்தளத்தை சுற்றி வருகிறது.
undefined
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பெண் போட்டியாளர்கள் சம்பள பட்டியல் குறித்த தகவல் வெளியாகியது. இதில் ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் என்ன சம்பளம் பெறுகிறார்கள் என்கிற தகவல் வெளியாகி இருந்தது.
undefined
இதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வின்னர் மற்றும் ரன்னர் ஆகிய பட்டங்களுக்கு சொந்தக்காரர்களான ஆரி - பாலாஜி ஆகியோருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட சம்பளம் விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.
undefined
டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றிய ஆரி ஒரு நாளைக்கு சம்பளமாக, 85 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
undefined
அதே போல் பாலாஜி முருகதாஸ் ஒரு நாளைக்கு சம்பளமாக 10 ஆயிரம் மட்டுமே பெற்றுள்ளார்.
undefined
எனவே இந்த 105 நாட்களில் பாலாஜிக்கு 10.5 லட்சம் மட்டுமே சம்பளமாக கிடைத்துள்ளதாம். பிக்பாஸ் வீட்டில் வெறும் 14 நாட்கள் மட்டுமே இருந்து முதல் போட்டியாளராக வெளியேறிய ரேகாவுக்கு கிடைத்த தொகை விட இது குறைவு என கூறப்படுகிறது.
undefined
எனவே பிக்பாஸ் போட்டியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் லிஸ்டில் இருக்கும் ஆரி, மேலும் 50 லட்ச தொகையுடன் வெற்றியாளர் என்கிற மணிமகுடத்தையும் சூடி வெளியேறியுள்ளார்.
undefined
இப்படி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள சம்பள பட்டியல் குறித்த தகவல் எந்த வித ஆதாரமும் இன்றி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined