Published : Dec 03, 2024, 01:36 PM ISTUpdated : Dec 03, 2024, 01:39 PM IST
Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதுவரை நடைபெற்ற எவிக்ஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவக்குமார் ஆகிய 7 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.
24
Bigg Boss Vijay Sethupathi
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு தற்போது 8-வது சீசனும் சக்சஸ்புல்லாக நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமல்ல, அதற்கு பின்னணியில் உழைக்கும் ஊழியர்களும் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளன. அதை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என அந்நிகழ்ச்சிக்கு பின்னால் 500க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் ஸ்ரீதர். இவர் நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த மரணச் செய்தி பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஸ்ரீதரின் உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
44
Bigg Boss House
மேலும் இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஸ்ரீதர் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? அல்லது ஏதேனும் கடன் பிரச்சனையா அல்லது வேலைப் பழு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீதரின் தற்கொலை முடிவு அவரின் குடும்பத்தை மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய பிக்பாஸ் குழுவையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.