செல்ல மகளுக்கு முத்த மழை பொழிந்த ரியோ... காதல் மனைவி, குட்டி பாப்பாவுடன் நெகிழ்ச்சியான ரீயூனியன் போட்டோஸ்...!

First Published Jan 20, 2021, 4:19 PM IST

நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்பத்தினரை சந்தித்த ரியோ காதல் மனைவி ஸ்ருதி மற்றும் மகள் ரித்தியுடன் தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 பேரும் இறுதி போட்டியாளர்களாக இருந்தனர்.
undefined
முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு, 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்ததாகவும், இரண்டாம் இடம் பிடித்த பாலாவுக்கு 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் கமல் தெரிவித்தார். பிக்பாஸ் வரலாற்றிலேயே யாரும் இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில்லை.
undefined
இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்த ரியோ ராஜ் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சார்பாக சிறந்த எண்ட ர்டெயினர் என்ற விருதையும் பெற்றார்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 100 நாட்களுக்கு மேல் குடும்பத்தை பிரிந்திருந்த இறுதி போட்டியாளர்களான ரம்யா பாண்டியன், ஆரி, கேபி, சோம், ரியோ ஆகியோருக்கு அவர்களுடைய வீடுகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
undefined
ரியோவுக்கும் அவருடைய குடும்பத்தினர் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து ஏரியாவே அதிரும் அளவிற்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
undefined
நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்பத்தினரை சந்தித்த ரியோ காதல் மனைவி ஸ்ருதி மற்றும் மகள் ரித்தியுடன் தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டார்.
undefined
மகளை அள்ளி எடுத்து கண் கலங்க முத்த மழை பொழியும் ரியோவின் போட்டோ மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
செல்ல மகளை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் ரியோ
undefined
செல்ல மகள் புன்னகை போல் வேறெந்த சங்கீதமும் இல்லை
undefined
அன்பில் கரையும் ரியோ
undefined
click me!