கொளுத்திப்போட்ட பிக்பாஸ்... அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்... பரபரப்புக்கு பஞ்சமில்லாத வீடியோ...!

First Published Dec 3, 2020, 2:55 PM IST

தற்போது அதை கொஞ்சம் பற்றி எரிய வைக்கும் நோக்கத்துடன்  பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் காரசார கொஞ்சம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் அலுத்துக்கொண்டனர். அதற்கான சரியான வாய்ப்பாக கடந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் அமைந்தது.
undefined
மற்ற போட்டியாளர்களை நாமினேஷனில் இருந்து பாதுகாப்பதற்காக சிலர் போன் காலை கட் செய்ததால் டாஸ்க் போர் அடித்ததாக ரசிகர்கள் தெரிவித்தாலும், அதன் பின்னர் போட்டியாளர்களுக்கு ஆரம்பித்துள்ள சண்டையும், அனல் பறக்கும் வாக்குவாதமும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
undefined
தற்போது அதை கொஞ்சம் பற்றி எரிய வைக்கும் நோக்கத்துடன் பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார். கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை ஒன்று முதல் 13 வரை ரேங்க் கொடுத்து வரிசைப்படுத்த கூறியிருக்கிறார். இதனால் போட்டியாளர்களுக்கிடையே ரேங்க் போர் வெடித்துள்ளது.
undefined
கேட்ட கேள்விக்கு எல்லாம் ஒரு மணி நேரம் உட்கார்ந்து நான் ஏன் பதில் சொல்லனும், போனை வச்சிட்டு போய் இருக்கலாமே? என பாலா, தனக்கும் ஆரிக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை குறிப்பிட்டு பொங்கி எழுகிறார்.
undefined
இதனால் கடுப்பான ஜித்தன் ரமேஷ், நீ பாட்டுக்கு போன் பேசிட்டு வெச்சிட்ட, அவர் (ஆரி) இரவு முழுவதும் தூங்கினாரா என்று கூட தெரியாது" என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். இதை பார்க்கும் போது இன்னைக்கு ஷோவில் மாஸ் என்டர்டெயின்மெண்ட் வெயிட்டிங் என்பது உறுதியாகியுள்ளது.
undefined
click me!