திருமணமான மூன்றே மாதத்தில் வனிதாவின் 3வது கணவருக்கு ஏற்பட்ட சோகம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை?

First Published Aug 25, 2020, 2:36 PM IST

வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா, அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார்.
undefined
ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாகரத்து செய்துள்ள வனிதா, மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழைப் பயன்படுத்தி, சமையலுக்கான தனி யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.
undefined
லாக்டவுன் காரணமாக வனிதாவின் யூ-டியூப் சேனல் சிக்கலில் மாட்ட, அந்த பிரச்சனையில் இருந்து அவருக்கு உதவ வந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்தது. மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பாலை காதலிப்பதை ஒப்புக்கொண்டார்.
undefined
கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது.
undefined
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் என பலரும் வனிதாவின் திருமண விவகாரத்தில் கருத்து சொல்ல கடுப்பான அவர் அனைவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
undefined
அதன் முதற்கட்டமாக யூ-டியூப் பிரபலம் சூர்யா தேவி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து வனிதாவை பற்றி அவதூறு பேசி வந்தவர்கள் சற்றே அமைதியாகியுள்ளனர்.
undefined
வனிதாவின் 3வது திருமணத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவருடைய வாழ்க்கை நல்ல படியாக நகர வேண்டும் என்றே அவருடைய ஆதரவாளர்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர்.
undefined
தற்போது வனிதா - பீட்டர் பால் தம்பதி போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிந்து வந்த நிலையில், நேற்று இரவு பீட்டர் பாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
undefined
பீட்டர் பாலுக்கு நெஞ்சு வலி என்றும், அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
இந்த தகவல் உறுதிபடுத்தபடாத நிலையில் வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “சொல்ல நிறைய இருக்கிறது... ஒன்றும் என்னால் முடியவில்லை. கடவுள் மிகப்பெரியவர்.. நம்புங்கள்.. எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது. வாழ்க்கை கடினமானதே... எதிர்கொள்ளுங்கள்... எல்லாமே சரியாகும்., கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்,, திருப்பி அடியுங்கள்... இந்த உலகுக்கு உங்களால் முடிந்தால் காட்டுங்கள்” என பதிவு செய்துள்ளார்.
undefined
click me!