கூடவே இருந்து துரோகம்..? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்திய ஆதங்கம்..!

First Published Jul 3, 2021, 2:44 PM IST

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து விட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடன் கூடவே இருந்து தனக்கு துரோகம் செய்த நபர் குறித்து பேசி, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்வது மட்டும் இன்று, அந்த கதாபாத்திரத்திற்காகவும் பெருமளவு கஷ்டப்பட்டு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் நடிகை என பெயர் எடுத்துள்ளார்ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் என்ன தான் மாடர்ன் பெண்ணாக நடிக்க ஆசைப்பட்டாலும், பெரும்பாலும் கிராமத்து கதை சார்ந்த கதாபாத்திரங்களே தேடி வருகிறது.
undefined
அப்படி கிராமத்து கதைக்களத்துடன் ஒன்றி நடித்த, 'தர்மதுரை', 'ரம்மி', 'கபெ ரணசிங்கம், கனா போன்ற படங்கள் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தவை. மாடர்ன் கதாபாத்திரங்களிலும்தன்னால் நடிக்க முடியும் என, சமீப காலமாக படு மாடர்ன் ட்ரெஸ்ஸில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
undefined
இந்நிலையில், 'ஐஸ்வர்யா ராஜேஷ்' தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த உதவியாளர்தனக்கு எதிராக செயல்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
undefined
ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைப்பற்றி ஃபர்சனல் விவரங்களை கூறுவது போன்ற செயல்களை என்னுடன் இருந்து கொண்டே, எனக்கு மிகவும் நம்பிக்கையான நபரே இதுமாதிரி செய்தது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
undefined
அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள். என்றாலும் தப்பு நடந்து விட்டது இனிமேல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன் .என்னை போல மற்றவர்களுக்கு எதுவும் இதுபோன்று நேரக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன் என்றும் கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
undefined
எனவே யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்றே எனக்கு புரியவில்லை’ என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
undefined
click me!