வாரிசு நடிகை சுஷாந்த் காதலை கழட்டிவிட இதுதான் காரணமா?.... சுஷாந்தின் நெருங்கிய நண்பர் பகிர்ந்த பகீர் தகவல்...!

First Published Aug 20, 2020, 2:47 PM IST

சுஷாந்த் சிக் ராஜ்புட் - சாரா அலிகான் காதல் முறிவு குறித்து தற்போது பகீர் காரணம் ஒன்றை அவருடைய நெருங்கிய நண்பர் வெளியிட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இவருடைய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
undefined
தினமும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக அவருடைய முன்னாள் காதலியான சாரா அலிகான் பற்றி தெரியவந்துள்ளது.
undefined
ரியா சக்ரபர்த்தியை காதலிப்பதற்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புட், பிரபல நடிகையான சாரா அலிகானுடன் காதல் வசப்பட்டிருந்தார்
undefined
இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
undefined
இந்நிலையில் சுஷாந்தின் நண்பரான சாமுவேல் ஹயோகிப் என்பவர் சாரா - சுஷாந்த் காதல் பிரிவதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
undefined
கேதர்நாத் பட விளம்பரங்களின் போது நடந்தது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. சுஷாந்த், சாரா அலிகான் இருவரும் காதலித்தார்கள். பிரிக்க முடியாத அளவிற்கு தூய்மையான அன்பு செலுத்தினர்.
undefined
இருவர் மீதும் ஒருவருக்கு ஒருவர் அதிக மரியாதை வைத்திருந்தனர். சாரா சுஷாந்தினரின் குடும்பத்தினர், நண்பர்களை தாண்டி அவரிடம் வேலை பார்த்தவர்களிடம் கூட மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
undefined
சோன்சிரியா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டை பார்த்த பிறகு சாரா அலி கான் சுஷாந்துடனான காதலை முறித்துக் கொண்டதற்கு பாலிவுட் மாஃபியா கொடுத்த அழுத்தம் தான் காரணமா என நினைத்து நான் வியக்கிறேன் என அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
undefined
ஏற்கனவே பாலிவுட்டின் முன்னணி வாரிசு நடிகர், நடிகைகள் சுஷாந்தை பல படங்களில் இருந்து நீக்கியதாகவும், அதனால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!