பணத்துக்காக அதிக ஆண்கள் சகவாசம்... அடிக்கடி கருக்கலைப்பு செய்யும் நடிகை ஓவியா! பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்!

First Published Aug 25, 2022, 2:53 PM IST

நடிகை ஓவியா குறித்து, பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு ஓவியா ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
 

தமிழில் நடிகர் விமலுக்கு ஜோடியாக 'களவாணி', படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், 'கலகலப்பு', 'மெரினா', 'மூடர்கூடம்', 'மத யானைக்கூட்டம்' என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், இவரால் தமிழில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.

இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.  யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்: Vijayakanth Birthday: விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் அதிக ராங்கிங் பெற்ற டாப் 5 படங்கள்..!
 

oviya

முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய ஓவியாவுக்கு தான் ரசிகர்கள் ஆர்மி துவங்கி தங்களது ஆதரவை கொடுக்க துவங்கினர். எனவே ஓவியா தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தனக்கு மனரீதியான பிரச்சனை இருப்பதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறினார். திடீர் என நீச்சல் குளத்தில் இறங்கி தற்கொலை வரை சென்றதால் அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் தனக்கு கொடுக்க விரும்பும் ஆதரவை பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது இவர் காதலித்த ஆரவுக்கு கொடுக்க வேண்டும் என ஓவியா கூறியதை தொடர்ந்து, மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் தான், ரசிகர்களின் பேராதரவோடு டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார்.

மேலும் செய்திகள்: ஒரே இயக்குனர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்த கேப்டன் விஜயகாந்த்! 70 சதவீதம் ஹாட்... முழு விவரம் இதோ..!
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 எம்.எல் மற்றும் காஞ்சனா 3 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது. இதை தொடர்ந்து அவர் சொல்லிக்கொள்ளும் படி இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. மேலும் தற்போது 3 படங்கள் இவரது கை வசம் உள்ளது.

சினிமாவில் அறிமுகமாகும் போது, இருந்ததை விட... சமீப காலமாக இவர் உடல் எடை குறைந்து கொண்டே வருகிறது. இது குறித்து பேசி தான் தற்போது ஓவியா ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். 

மேலும் செய்திகள்: வாயில் டின்னுடன்... டீப் நெக் உடையில்... தொடை முழுவதையும் காட்டி.. உச்ச கவர்ச்சியில் ஷிவானி கொடுத்த கூல் போஸ்!
 

இதுகுறித்து யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், நடிகை ஓவியா கருக்கலைப்பு மாத்திரைகள் அதிகம் எடுத்து கொள்வது தான் அவரது எடை குறைவுக்கு காரணம் என்றும், அவர் அடிக்கடி நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும், பணத்துக்காக அதிக ஆண்கள் சகவாசம் அவருக்கு உண்டு, எனவே... அவர் அடிக்கடி கருக்கலைப்பு செய்வது தான் இவரது உடல் எடைகுறைக்கு காரணம் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
 

ஏற்கனவே திரைபிரபலன்கள் குறித்து அவதூறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும், பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, நெட்டிசன்கள் மற்றும் ஓவியா  ரசிகர்கள் தங்களது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி பயில்வானை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

click me!