கமல் சொன்ன வார்த்தை..? கையை தரையில் குத்தி கண்ணீர் விட்ட பாலாஜி! பரபரப்பான புரோமோ..!

First Published Jan 10, 2021, 2:51 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால் கடந்த வாரம் முழுக்க, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற,  விடாப்பிடியாக மோதிக்கொண்ட போட்டியாளர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகி உள்ளனர்.
 

விறுவிறுப்பாக நடந்த போட்டி முடிவுக்கு வந்த நிலையில், முதல் போட்டியாளராக இறுதி போட்டிக்குள் சோம் சேகர் நுழைந்துள்ளார்.
undefined
இவருக்கு தேர்வு செய்யப்பட்டது, உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு எப்படி உடன்பாடு இல்லையோ அதே போல், மக்கள் சிலரும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இறுதி நாட்கள் வரை அவர் தன்னுடைய முழு திறமையையும் காட்டாமல் உள்ளார் என்றே பார்க்கப்படுகிறது.
undefined
இதை தொடர்ந்து நேற்றைய தினம் மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் ஆரியும் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல்.
undefined
இந்த நிலையில் சற்று முன்னர் மக்களால் காப்பாற்றப்பட்டு இறுதிப் போட்டிக்குச் செல்லும் இன்னொரு போட்டியாளரை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.
undefined
இதில் இடைவெளிக்குப்பின் அறிவிக்கலாம் என்பது பழைய தந்திரம் என்றும் அதனால் நேரடியாக அதனை சொல்லிவிடுகிறேன் என்று கூறிய கமல், பாலாஜி கூறலாமா? என்று கேட்க உடனே பாலாஜி திருதிருவென விஷிக்கிறார். பின்னர் ஆம், நீங்கள் தான் காப்பாற்றப்பட்டீர்கள் என்று கமல் கூறினார்.
undefined
இதை கேட்டதும் பாலாஜி உணர்ச்சி பொங்க, தரையில் கையை குத்தி தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.
undefined
ஆனந்தகண்ணீருடன் இருக்கும் பாலாஜிக்கு சக போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில், பாலாஜி சற்றும் எதிர்பாராத போட்டியாளர் ஷிவானி இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
undefined
click me!