NCB கஸ்டடியில் ஷாருகான் மகன்... தந்தையை பார்த்ததும் என்ன நடந்தது? ஆர்யன் கான் கேட்டதை கொடுத்த அதிகாரிகள்..!

First Published Oct 6, 2021, 3:32 PM IST

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan), மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி கொண்டாடியது தொடர்பாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருடைய நிலை என்ன என்பது குறித்த தகவல் இதோ...

தற்போது போதை மருந்து பார்ட்டியில் கலந்து கொண்டதற்காக, ஆர்யன் கான் தரப்பில் இருந்து, அவருக்கு ஜாமீன் பெற முயன்றும் அது கிடைக்காமல் போனது. மும்பை நீதி மன்றம் இவருக்கு அக்டோபர் 7  (என்சிபி) காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஆர்யன் கானிடம் NCB தொடர்ந்து விசாரணை செய்துள்ளது. இதற்கிடையில், NCB அலுவலகத்திற்கு அருகிலுள்ள தேசிய இந்து உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட உணவும் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆர்யனின் குடும்பத்தில் இருந்து உணவு கொடுப்பதற்காக கோரிக்கை வைக்கப்பட்டது, அனால் அந்த கோரிக்கையை NCB அதிகாரிகள்  நிராகரித்துள்ளனர்.

மேலும் ஷாருக் மனைவி கௌரி கான் தனது மகனை சந்திக்க வந்த போது, மகனுக்கு மிகவும் பிடித்த பர்கரை கொண்டு வந்திருந்தார், ஆனால் என்சிபி அதை கொடுக்கவும் அனுமதிக்கவில்லை.

என்சிபியின் காவலில் ஆர்யன் கானின் நாட்கள் எப்படி செல்கின்றன என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. NCB லாக்கப்பில், ஆரியன் விசாரணை நிறுவனத்திடமிருந்து சில அறிவியல் புத்தகங்களைக் கேட்டுள்ளார், அதை அதிகாரிகள் அவருக்குக் கொடுத்துள்ளனர்.

அதே நேரத்தில், அவருக்கு பிரியாணி, பூரி-பாஜி மற்றும் பருப்பு சாதம் போன்றவை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஷாருக்கான் தனது மகனை சந்திக்க NCB யிடம் அனுமதி பெற்று வந்த போது அவர் தந்தையைப் பார்த்து அழுதுள்ளார், பின்னர் ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு ஷாருக்கான் அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆர்யன் கைது செய்யப்பட்ட பிறகு, சமூக ஊடகங்களில் மக்கள் ஷாருக்கானுக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும் ஷாருக்கானுக்கு ஆதரவாக மும்பையில் உள்ள ரசிகர்களும் அவர் வீட்டின் முன் கூடினர்.

மேலும் ஷாருக்கானின் வேதனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக, சில பிரபலங்களும் வீடு தேடி வந்து ஆறுதல் கூறி வருகிறார்கள். ஆனால் ஷாருகான் மற்றும் அவரது குடும்பத்தினர் இதனை விரும்பாமல் இந்த சந்திப்புகளை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!