வெறும் 200 ரூபாய்க்காக இப்படியா?... கொடைக்கானலில் அடுத்த பிரச்சனையை கிளப்பிய பிரபல நடிகை...!

First Published Oct 19, 2020, 1:26 PM IST

“அருவி” படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிதி பாலன் மாஸ்க் அணியாமல் சென்றதற்காக அபராதம் செலுத்த மறுத்து அரசு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறையாக இ-பாஸ் இல்லாமல் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சென்றதும், அங்குள்ள பேரிஜம் ஏரியில் அனுமதி இல்லாமல் மீன்பிடித்ததும் மிகப்பெரிய பிரச்சனைகளை கிளப்பியது.
undefined
இதையடுத்து அவர்களுக்கு உதவி வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சூரி, விமல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
undefined
இந்நிலையில் “அருவி” படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை அதிதி பாலன் தற்போது கொடைக்கானலில் அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.
undefined
நடிகை அதிதி பாலன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அங்குள்ள ஏரி பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.
undefined
அப்போது அந்த வழியாக வந்த சுகாதாரத்துறை அதிகாரி காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்துள்ளார். அந்த சமயத்தில் அதிதியும் அவருடைய நண்பரும் காருக்குள் முகக்கவசம் அணியாமல் அமர்ந்துள்ளனர்.
undefined
இதனால் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதன் படி அதிதி பாலனுக்கும் அவருடைய நண்பருக்கும் தலா ரூ.100 வீதம் 200 ரூபாயை அபராதமாக விதித்துள்ளார்.
undefined
இதை ஏற்க மறுத்த அதிதி பாலனும், அவருடைய நண்பரும் சுகாதாரத்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
undefined
அதன் பின்னர் அரசின் அறிவுறுத்தலின் படியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி உறுதிபட தெரிவித்த பின்னர், இருவரும் அபராத தொகையை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றுள்ளனர்.
undefined
click me!