மேலும் அந்த பதிவில் அவர் கூறியதாவது : “இந்த நேரத்தில் என்னுடைய பெற்றோருக்கு, நலம் விரும்பிகளுக்கு, ஆசிரியர்கள் என எல்லாருக்குமே நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நான் உயிரோடு இருக்கிறேன். 3 நாள் முன்னாடி நாங்கள் மியூசிக் வீடியோவுக்காக ஷூட்டிங் செய்து கொண்டிருந்தபோது, மேலேஇருந்த லைட் சரிந்து கீழே விழுந்தது.
நான் ஒரு செகண்ட் முன்னாடியோ, அல்லது பின்னாடியோ தள்ளிப்போய் இருந்தால் அவை என்மீது தான் விழுந்திருக்கும். எங்களுக்கு எதுவும் ஆகல நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். இருந்தாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து நானும் என்னுடையை டீமும் இன்னும் மீளவில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.அமீனின் இந்த பதிவைப் பார்த்து பதறிப்போன ஏ.ஆர்.ரகுமான், இறைவனின் அருளால் நீ தப்பித்து இருக்கிறாய் என கமெண்ட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தரமான செயலால்...! நிஜ 'வாத்தி' கே.ரங்கையாவை பெருமைப்படுத்திய தனுஷின் வாத்தி படக்குழு!