இசை நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்டி லைட்மேன்களை காப்பாற்றும் ஏ ஆர் ரஹ்மான்!

Published : Feb 27, 2023, 06:56 PM IST

தமிழ் சினிமாவில் லைட்மேன்களுக்கு உதவும் வகையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி சென்னை இசை நிகழ்ச்சி ஒன்றை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நடத்துகிறார்.  

PREV
16
இசை நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்டி லைட்மேன்களை காப்பாற்றும் ஏ ஆர் ரஹ்மான்!
லைட்மேன்களுக்கு உதவும் ஏ.ஆர்.ரஹ்மான்

ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்தை தன்னுள் கொண்ட அற்புதமானவர்.

26
சென்னையில் இசை நிகழ்ச்சி

ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சினிமா துறையில் எண்ணற்ற சாதனைகளை படைத்தவர். சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு சினிமா துறையில் லைட்மேன்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

36
ஆர் கே செல்வமணி

இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருப்பதாவது: சினிமா துறையில் ஒரு அங்கமான லைட்மேன்களுக்கு அவர்கள் பணியாற்றும் போது ஏதேனும் விபத்து நேர்ந்தால், அவர்களுக்கு நிரந்தரமாக உதவும் வகையில் ஒரு நிதி ஆதாரத்தை ஏற்படுத்த உள்ளார்.

46
சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் இசை நிகழ்ச்சி

இதற்காக வரும் மார்ச் 19 ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு படப்பிடிப்பின் போது லைட்மேன்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தால் அவர்களது குடும்பங்களுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

56
லைட்மேன்களுக்கு உதவும் ஏ ஆர் ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே போன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

66
சென்னையில் இசை நிகழ்ச்சி

திரைப்பட துறையில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களது வருமானத்தில் 1 சதவிகிதத்தை சினிமா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.  இதே போன்று விற்கப்படும் ஒவ்வொரு திரைப்பட டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் வசூலித்து 60 வயதுக்கு மேற்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் கார்பஸ் நிதியை உருவாக்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories