பல ஆண்டுகளுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் தீபாவளி திருநாளில் வெளியாகிறது என்கிற தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட பல படங்கள் தலைவருடன் மோதி ஜெயிக்க முடியுமா? என்கிற சந்தேகத்துடன் ஜகா வாங்கியது.
ஆனால் ஆர்யா - விஷால் நடிப்பில் உருவாகி இருந்த 'எனிமி' படத்தின் கதை மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக தீபாவளி ரேஸில் இறக்கி விட்டனர் படக்குழுவினர்.
'அண்ணாத்த' திரைப்படம் தமிழகம், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அதிகமான திரையரங்குகளில் வெளியானதால், எனிமிக்கு மிக குறைவான திரையரங்குகளே கிடைத்தது.
முதல் நாள் வசூல் நிலவரப்படி, அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 70 கோடிக்கு வசூல் செய்ததாக கூறப்பட்டது. 'அண்ணாத்த' படத்தின் மீது இருந்த, எதிர்பார்ப்பே இவ்வளவு வசூல் செய்ய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தொடர்ந்து 'அண்ணாத்த' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் 20 கோடி இப்படம் வசூல் செய்துள்ளதாம்.
தலைவரை எதிர்த்து துணிந்து தீபாவளி ரேஸில் இறங்கிய, எனிமி திரைப்படம் இரண்டாவது நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 3 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாய்க்கியுள்ளது.