அமலாபால், ரேவதி, ரம்யா கிருஷ்ணா என இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! யார் யார் தெரியுமா?

First Published Jun 5, 2020, 10:20 PM IST

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகைகள், இயக்குனர்களை காதலித்து கரம் பிடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து ஒரு தொகுப்பு இதோ...
 

தமிழ் திரையுலகில் இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலருக்கு குருவாக இருப்பவர், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. இவர் இயக்கத்தில் வெளியான பல படங்களில் நடிகை ஷோபா நடித்துள்ளார். அந்த வகையில் 'கோகிலா' எங்கிற படம் இவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் இந்த படத்தின் இயக்குனர் பாலு மகேந்திராவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.
undefined
நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்ட பொன்வண்ணன்... நடிகை சரண்யா நடித்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. காதலித்தவரையே திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
undefined
இயக்குனர் பிரதாப் நடிகை ராதிகாவை வைத்து, 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை இயக்கியபோது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த மண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
undefined
இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பூர்ணிமா ஜெயராம், டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தற்போது வரை மிகவும் சந்தோஷமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
undefined
தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை, 'சந்தரலேகா' படத்தில் நடித்த போது ரம்யா கிருஷ்ணன் காதலிக்க ஆரம்பித்தார். பின்னர் சில வருடங்களுக்கு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்
undefined
இயக்குனர் ராஜ் குமார் 'நீ வருவாய் என' படத்தில் நாயகியாக நடித்த போது, ராஜகுமாரனை காதலிக்க துவங்கினார் தேவயானி. பின் பெற்றோரை மீறி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
undefined
ப்ரீதவை வைத்து, ஹரி ஒரு படம் கூட இயக்க வில்லை என்றாலும், இருவரும் மனதிற்கு பிடித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தும் வருகிறார்கள்.
undefined
சுஹாசினியை வைத்து மணிரத்னம் படம் இயக்கவில்லை என்றாலும், மணிரத்னத்தின் சில படங்களில் டயலொக் ரைட்டராகவு, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார் சுஹாசினி. இப்படி அறிமுகமாகி பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
undefined
இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தில் இருவரும் காதலிக்க துவங்கி பின் 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். பின்னர் எதிர்பாராத சில கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
undefined
'முறை மாமன்' படத்தில் மூலம், நடிகை குஷ்புவை காதலிக்க துவங்கிய சுந்தர் சி 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு அழகிய மகள்கள் உள்ளனர்.
undefined
நடிகை ரோஜாவை, தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வமணி. 10 வருடன் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
undefined
நடிகை ரேவதி, இயக்குனர் - ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
undefined
நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் மற்றும் தலைவா என இப்படங்களில் நடித்தார். முதல் படத்திலேயே இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், இரண்டாவது படத்தில் இவர்கள் காதல் வலுவானது. பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
undefined
click me!