அமலா பாலின் 'அதோ அந்த பறவை போல' ..வெளியானது ரிலீஸ் தேதி !

First Published Aug 8, 2022, 6:48 PM IST

அமலபால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஆக்ஷன் நாடகமான இதை அறிமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கியுள்ளார். 

Amala Paul

கேரளத்து பைங்கிளியான அமலாபால் 2009 ஆம் ஆண்டு     நீலத்தாமர என்னும் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் இயக்கத்தில் வெளியான வீரசேகரன் படத்தின் மூலம் தமிழ் சினிகமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவருக்கு சிந்து சமவெளி நாயகி அந்தஸ்தை கொடுத்தது. இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதை அடுத்து அதே ஆண்டில் இவர் நடித்த மைனா மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்பாத்தி எஸ் அகோரம் இணைந்து விநியோகம் செய்த இந்தப் படத்தில் விதார்த், அமலாபால் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் நாயகனை விட நாயகிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும்  படம் 58 வது பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது.

Amala Paul

மேலும் செய்திகளுக்கு...பிரமிக்கவைக்கும் நகையுடன் இளவரசிகள்...ஜுவல்லரி பார்ட்னர்களை அறிமுகப்படுத்திய பொன்னியின் செல்வன்

இதைத் தொடர்ந்து விக்ரமுடன் இவர் நடித்திருந்த தெய்வத்திருமகள் படம் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. ஆனால் அதை அடுத்து வெளியான படங்கள் எதுவும் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுக்கவில்லை. தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும். நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் தோன்று இருந்தார் அமலா பால். 

Amala Paul

பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடிக்க துவங்கியவர் முன்னணி கதாநாயகிகள் போலவே தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். அதன்படி இவர் நடித்த அம்மா கணக்கு படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து ஆடை படத்தில் வித்யாசமான தோற்றத்தில் இவர் நடித்து விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...தெலுங்கு கற்றுக்கொள்ளும் சிவகார்த்திகேயன்..ஓன் வாய்ஸில் தான் டப்பிங்காம்...

தற்போது ஆடு ஜீவிதம், ஆசிரியர் என்னும் என்னும் மலையாள படங்களில் நடித்து வரும் அமலபால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஆக்ஷன் நாடகமான இதை அறிமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரைக்கானும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செஞ்சுரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் காட்டில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Amala Paul

கண்ணதாசன் எழுதிய எம் ஜி ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடலை தலைப்பாகக் கொண்ட இந்தப்படம் வயநாடு மற்றும் கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்க, சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் நட்சத்திர நடிகர்களின் பலர் இதில் இணைந்துள்ளனர்.

click me!