அஜித் நடிப்பில் கடைசியாக, பாலிவுட் திரையுலகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் வெளியானது.
undefined
வித்தியாபாலன் கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தை எச்.வினோத் இயக்கத்தில், மறைத்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார்.
undefined
இந்த படத்தை தொடர்ந்து, அஜித் மீண்டும் இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில், இணைந்து 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார்.
undefined
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
undefined
எனவே, அஜித் தற்போது தன்னுடைய வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
undefined
அதே நேரத்தில், சில இயக்குனர்கள் இந்த லாக் டவுன் நேரத்தில் அஜித்தை சந்தித்து பட கதைகளை கூறிவருகிறார்கள்.
undefined
அதனால் அடுத்தது அஜித் யார் இயக்கத்தில் நடிக்கிறார், வலிமை படப்பிடிப்பு முன்பே சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவியது.
undefined
இதனால், தயாரிப்பாளர் போனி கபூர் மிகுந்த வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.
undefined
இதை அறிந்த அஜித், இது போல் எழும் வதந்திகளை நம்ப வேண்டாம். 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே மற்ற படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இதனால் போனி கபூர் நிம்மதி அடைந்ததோடு, கொரோனா தடை விலகியதும், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கும் தயாராகி வருகிறாராம்.
undefined