நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் தான் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் கதையை கவனமாக தேர்வு செய்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதன்படி அவருக்கு கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, வெங்கட் பிரபு, பால்கி என ஏராளமான இயக்குனர்கள் கதை சொல்லினர்.
ஆனால் ரஜினியோ கடைசியாக கதை சொன்ன நெல்சனுக்கு தான் ஓகே சொன்னார். இதன்பின் தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டனர். அதன்படி சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
இதனிடையே கடந்த மாதம் நெல்சன் இயக்கத்தில் வெளியான் பீஸ்ட் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றதால் தலைவர் 169 படம் திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து சர்ச்சைகளுக்கு முடிவுகட்டும் விதமாக ரஜினியும், நெல்சனும் தலைவர் 169 படம் சொன்னபடி நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.