இந்நிலையில், நடிகர் சூரி மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பருத்திவீரன், மெளனம் பேசியதே, ஆதிபகவன், யோகி, ராம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான அமீர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.