தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, சில காலம் திரை உலகை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த இருந்த நிலையில் திடீரென இவருக்கும், இவருடைய காதல் கணவரான பிரபல நடிகர் நாக சைதன்யாவிற்கும், திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டனர். ஏற்கனவே இது குறித்த வதந்திகள் வரும் போது அதனை கண்டுகொள்ளாமல் இருந்த இருவரும், பின்னர் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இந்த தகவல் தமிழ் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.