1998-ல் தனக்கு இந்த கொடுமை நடந்ததாகவும், அந்த சமயத்தில் சோசியல் மீடியா எதுவும் இல்லாததால், இதைப்பற்றி பேச முடியவில்லை. அவரை எதிர்த்ததால் சினிமாவில் மிகப்பெரிய பாடகி ஆகவேண்டும் என்கிற தனது கனவு உருக்குலைந்து போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் செல்போன் வசதியும் இல்லாததால், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் புவனா கூறியிருக்கிறார்.
மற்றொரு பேட்டியில், இதுவரை 17 பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அதில் 4 பேர் மட்டுமே தங்களது முகத்தையும், பெயரையும் வெளிப்படையாக கூறி உள்ளனர். நான் தற்போது எனக்கு நடந்த கொடுமையை பற்றி பேசியதற்கு முக்கியமான காரணம், இனி வரும் இளம் பாடகிகளின் கனவு இதுபோன்ற நபர்களால் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக தான்.
சின்மயி உடைய தைரியம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. வைரமுத்து மீது புகார் தெரிவித்ததால் அவரை பலரும் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் சின்மயி போன்ற தைரியமாகவும், துணிச்சல் உடனும் அதனை வெளியில் சொல்ல வேண்டும்” என புவனா சேசன் கூறி இருக்கிறார். சின்மயியை தொடர்ந்து புவனா சேஷனும் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளதால் தற்போது இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் முதல் யோஹன் வரை... ஆஹா ஓஹோனு பில்-டப் கொடுத்து தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ