Biggboss 5: பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் காதல் விளையாட்டு.. அமீரை தொடர்ந்து முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா!

First Published Dec 21, 2021, 3:53 PM IST

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில், கடந்த வாரம் அமீர் (Amir) பாவினிக்கு (Pavini) முத்தம் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது அடுத்ததாக இதேபோன்ற முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் அக்ஷரா (Akshara).

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே, சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. முதல் சீசனில் பிக்பாஸ் வீட்டில் துவங்கிய மருத்துவ முத்தத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முத்தக் காட்சிகள் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ரசிகர்களை முகம் சுளிக்கும் வைக்கும் வகையில், பாவினியிடம் நடந்துகொண்டார் டான்ஸ் கோரியோகிராபர் என்கிற அடையாளத்தோடு,  பிக்பாஸ் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்துள்ள  அமீர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான இந்த நிகழ்ச்சியில், இவர் இப்படி நடந்து கொண்டது மிகப்பெரிய விமர்சனங்களுக்கு வித்திட்டது.

அதே நேரத்தில் டிஆர்பியை கூட்டுவதற்கு ஆகவே, இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக சிலர் சமூக வளைதளத்தில் சாடிவந்ததும் பார்க்க முடிந்தது.

நெட்டிசன்கள் இதை வைத்து விதவிதமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். ஏற்கனவே அபிநய் காதல் விஷயத்தில் சிக்கிய பாவினி தற்போது அமீரின் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதே நேரம் அமீர் திடீர் என கன்னத்தில் முத்தம் கொடுத்தது தவறு என்பதை பாவினி சுட்டிக்காட்டினார். பின்னர் அதை மறந்து மீண்டும் அமீரிடம் நெருக்கம் காட்டி வருவது, அமீர் மீது இவருக்கும் ஒரு வித ஈர்ப்பு உள்ளதோ... என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமீரை தொடர்ந்து தற்போது புதிய முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் அக்ஷரா. ஏற்கனவே அக்ஷரா - வருணுக்கு இடையே ஒரு காதல் ட்ராக் ஓடுவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அக்ஷரா திடீர் என வருண் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

எனவே அமீரை விமர்சித்த பலரும் அக்ஷரா நடந்துகொண்டது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்பது போன்ற கேள்விகளை தற்போது எழுப்பி வருகின்றனர். எனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்பதையும் இதுகுறித்து கமல் போட்டியாளர்களிடம் விசாரிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!