நைட் பார்ட்டிக்குப் பின் நடந்தது என்ன?... சுயநினைவு திரும்பியதும் யாஷிகா பரபரப்பு வாக்குமூலம்...!

Published : Jul 26, 2021, 03:01 PM IST

இடுப்பு, முதுகு, கை, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

PREV
15
நைட் பார்ட்டிக்குப் பின் நடந்தது என்ன?... சுயநினைவு திரும்பியதும் யாஷிகா பரபரப்பு வாக்குமூலம்...!
Yashika anand

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்தின் ஓட்டுசாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு பார்ட்டில் ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார்.  அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூலேறிக்காடு என்ற பகுதி  அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

25
Yashika anand

அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்துள்ளது. காருக்குள் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான பெண் இன்ஜினியர் வள்ளிசெட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

35
Yashika anand

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளத்தில் சிக்கிய காரையும், படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டனர். முதற்கட்டமாக பூஞ்சேரியில் உள்ள முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட யாஷிகா மற்றும் அவருடைய ஆண் நண்பர்களான சையது, ஆமீர் ஆகிய மூவரும், படுகாயங்கள் அதிகம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

45

இடுப்பு, முதுகு, கை, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சிகிச்சைப் பிறகு சுய நினைவுக்கு வந்த யாஷிகாவிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் மதுபோதையில் இல்லை என்பதை யாஷிகா ஆனந்த் உறுதிபடுத்தியுள்ளார். 

55
Yashika anand

காரை அதிகவேகமாக ஓட்டிச் சென்றதாகவும், அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். காரின் முன் இருக்கையில் தன்னுடன் அமர்ந்திருந்த தோழி வள்ளி செட்டி பவணி சீட் பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும் பல்வேறு விஷயங்களை தன்னுடைய வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார். 

click me!

Recommended Stories