எனக்கு அந்த மாதிரி படங்கள்ல நடிக்கனும்னு ரொம்ப நாளா ஆசை... யாரும் வாய்ப்பு தரமாட்றாங்க- வருத்தத்தில் வரலட்சுமி

First Published Sep 9, 2022, 3:10 PM IST

varalakshmi sarathkumar : தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி, தனக்கு விருப்பமான கேரக்டர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் - சிம்பு கூட்டணியில் ரிலீசான போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சிம்புவுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக பாலாவின் தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான சண்டக்கோழி படத்தின் மூலம் வில்லியாக அவதாரம் எடுத்த வரலட்சுமிக்கு அடுத்தடுத்து விஜய்யின் சர்கார், தனுஷின் மாரி 2 போன்ற படங்களில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

இதையும் படியுங்கள்... உலகத்திலேயே யாரும் செய்யாத... புது பிசினஸை தொடங்கி தொழிலதிபர் ஆனார் அர்ஜுன் மகள் அஞ்சனா - அதுல என்ன ஸ்பெஷல்?

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் வரலட்சுமி. குறிப்பாக தமிழில் பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யசோதா, சபரி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி. 

இந்நிலையில், நடிகை வரலட்சுமி, சமீபத்திய பேட்டியில், தனக்கு நகைச்சுவை கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் ஆனால் அதுபோன்ற பட வாய்ப்புகள் தனக்கு வருவதில்லை என்றும் கூறி இருக்கிறார். தனக்கு பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு வருவதாகவும், யாராச்சும் காமெடி படங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று ஓப்பனாக வாய்ப்பு கேட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?

click me!