நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் - சிம்பு கூட்டணியில் ரிலீசான போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சிம்புவுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக பாலாவின் தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் வரலட்சுமி. குறிப்பாக தமிழில் பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யசோதா, சபரி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி, சமீபத்திய பேட்டியில், தனக்கு நகைச்சுவை கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் ஆனால் அதுபோன்ற பட வாய்ப்புகள் தனக்கு வருவதில்லை என்றும் கூறி இருக்கிறார். தனக்கு பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு வருவதாகவும், யாராச்சும் காமெடி படங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று ஓப்பனாக வாய்ப்பு கேட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?