அவர் தனது இரண்டாவது இன்னிங்சில் அம்மா வேடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுந்தந்தது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா தான் என சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார்.