நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான மற்றும் கஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், கடந்தாண்டு இவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 6 மாதங்கள் படாத பாடுபட்ட சமந்தா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்த பின்னரே அதில் இருந்து படிப்படியாக மீண்டார். மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் சினிமாவில் மீண்டும் பிசியாகிவிட்டார் சமந்தா.