Sai Pallavi: பிங்க் நிற பட்டு புடவையில்.. தலைநிறைய மல்லி பூ வைத்து.. அளவான மேக்கப்பில் அசர வைக்கும் சாய்பல்லவி

First Published Dec 15, 2021, 4:59 PM IST

நடிகை சாய் பல்லவி (Sai Pallavi), எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு தன்னுடைய அழகை வெளிப்படுத்தி காட்டுபவர். தற்போது பிங்க் நிற பட்டு புடவையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 

ஒரே ஒரு படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது எல்லாம் அனைவருக்கும் சாத்தியமாகாது. ஆனால் சாய் பல்லவி தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 மாநில ரசிகர்களின் மனதையும் ஒரே படத்தில் கொக்கிப் போட்டு கவர்ந்திழுத்தார். 
 

தமிழில் சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார். 
 

கண்டமேனிக்கு தன்னை தேடி வரும், அனைத்து கதைகளிலும் நடிக்காமல், தன்னைக்கு எப்படி பட்ட கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும், என்பதை தேர்வு செய்து நடித்து அசத்தி வருவது தான் சாய் பல்லவியின் பலம் என்று கூறலாம்.
 

மாடர்ன் பெண்ணாக நடித்தால் தான், திரையுலகைள ஜெயிக்க முடியும் என நிலைக்கு சில நடிகைகளின் கண்ணோட்டத்தையும் மாற்றியது, சாய் பல்லவியின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ். மேலும் இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அது வைரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பளீச் அழகை வெளிப்படுத்தும் விதமாக, பிங்க் நிற சேலையில் புதிய சில புகைப்படங்களை வெளியிட அது வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.

click me!