கொரோனா பிரச்சனையில், ஆந்திர மாநிலத்தை சேர்த்த பலர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கொரோனா உள்ளதா என சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளை அழைத்து செல்ல கடந்த வாரம், கடற் படையில் உள்ள 412 புதிய ஆம்புலன்ஸ்களை அரசாங்கம் சேர்த்ததுடன், ஒரு சில வாகனங்கள் நகரி தொகுதிக்கு ஒதுக்கப்பட்டன.
undefined
அவசர காலங்களில் தயாராக இருக்க வேண்டிய ஆம்புலன்ஸ்களை எங்கேயும் அனுப்பாமல், ரோஜா தனது தொகுதியில் பல மணி நேரம் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுத்திகிறது.
undefined
மற்றொரு விழா ஒன்றில் கலந்து கொண்ட பின், ரோஜா புதிதாக அரசு நகரி தொகுதிக்கு வழங்கியுள்ள ஆம்புலன்ஸில் ஏறி அதை ஓட்டியபடி தனது ஆதரவாளர்களுடன் ரோஜா புகைப்படம் எடுத்து கொண்டதாக, எதிர்க்கட்சி தரப்பில் ரோஜாவில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
undefined
மேலும், இது குறித்து அரசியல் கட்சி தலைவர் ஒருவர் ரோஜாவை பார்த்து, அவசர ஊர்த்தியான ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு ரோஜா விடம் லைசென்ஸ் இருக்கிறதா என்று சந்தடி சாக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்.
undefined
ரோஜா சுமார் 20 கிலோ மீட்டர் ஆம்புலன்ஸ் ஓட்டிய போஸ் கொடுத்த விவகாரம் தற்போது தீயாய் எரிந்து வருகிறது.
undefined
சமீபத்தில் தான், நகரி தொகுதிக்கு தண்ணீர் குழாய் திறக்க வந்த ரோஜாவிற்கு அந்த தொகுதி மக்கள் வழி நெடுக்க பூ தூவி வரவேற்ற சம்பவம் மிகவப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
undefined