இந்த நாள் வரை கேரள திரையுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் 18 பேர் மீது, ஒன்பதுக்கும் மேற்பட்ட நடிகைகள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1991ம் ஆண்டு முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை நடந்த பல பாலியல் ரீதியான சம்பவங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல நடிகை ராதிகா சரத்குமார், கேரளா திரையுலகில், நடிகைகள் பயன்படுத்தும் கேரவன்களில் கூட ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு அவர்களது அந்தரங்கம் படம்பிடிக்கப்பட்டதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார்.