என்ன ஆச்ச... 10 வருட காதல் பிரேக்கப்பா? மீம்ஸ் போட்டு ரசிகர்களை மண்டை காய விட்ட பிரியா பவானி ஷங்கர்!

First Published Nov 2, 2021, 6:31 PM IST

நடிகை பிரியா பவானி சங்கர் (Priya bhavani Shankar), சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவை பார்த்த ரசிகர்கள் காதலரை பிரிந்து விட்டாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரொமான்டிக் மழை பொழிந்துள்ளார்.

ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொலைக்காட்சியில் துவங்கி, சீரியல் நடிகை, தொகுப்பாளினி என தன்னை தானே மெருகேற்றி கொண்டு திரைப்பட நடிகையாகவும் மாறினார்.

இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான 'மேயாதமான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான 'ஓ மணப்பெண்ணே' படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார்.

தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் ’யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என்னுடைய ரியாக்சன் இதுதான்’ என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த  மீம்ஸை பார்த்த ப்ரியா பவானி ஷங்கரின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், தனது காதலரை ப்ரியா பிரிந்து விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.

எந்த வதந்தி தன்னை பற்றி பரவினாலும் பளீச் என பதில் கொடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர் இந்த மீம்ஸ் குறித்தும் விளக்கம் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!