துபாயில் ரகசியமாக நடந்த திருமணம்... தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா - வைரலாகும் போட்டோஸ்

First Published Oct 26, 2022, 7:40 AM IST

துபாயை சேர்ந்த தொழிலதிபரை நடிகை பூர்ணா ரகசியமாக திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான பூர்ணா, பரத் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தொடர்ந்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, அடங்கமறு, காப்பான், தலைவி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சானித் ஆசிஃப் அலி என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆனது. நிச்சயம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் திருமணம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாததால், இவர்களது திருமணம் நிச்சயத்துடன் நின்றுவிட்டதாக செய்திகள் பரவின.

இதையடுத்து தனது வருங்கால கணவருக்கு முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை பூர்ணா.

இதையும் படியுங்கள்... படவாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவில்லை..! இது தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த சாக்ஷி அகர்வால்!

இந்நிலையில், நடிகை பூர்ணாவின் திருமணம் துபாயில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

துபாயை சேர்ந்த தொழிலதிபரை நடிகை பூர்ணா ரகசியமாக திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பூர்ணாவின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!