முதலில் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் நோ சொன்னதால், மாளவிகா மோகனனிடமும், பூ பார்வதியிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இறுதியாக பூ பார்வதியை தான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்துள்ளாராம் பா.இரஞ்சித்.