இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் இயக்குனர்கள்..! தான் பட்ட கஷ்டத்தை முதல் முறையாக கூறிய நடிகை நிலா..!

First Published Jul 6, 2020, 11:16 AM IST

இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் இயக்குனர்கள்..! தான் பட்ட கஷ்டத்தை முதல் முறையாக கூறிய நடிகை நிலா..!
 

தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, இசை, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிலா.
undefined
மீரா சோப்ரா என்கிற பெயரில் இந்தியில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழில் படங்களிலும் நடித்துள்ளார்.
undefined
இவர் இந்தி திரையுலகில், வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தால் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பற்றி பேசி ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை சாட்டியிருந்தார்.
undefined
இந்நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நானும் வேறு சில நடிகர்கள் எதற்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள், அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்வது எது என்ற விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
undefined
சினிமா துறை குறிப்பிட்ட அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது இயக்குனர்கள் சிலர் இரக்கமில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
undefined
முதிர்ச்சியான இயக்குனர்கள் அவ்வாறு செய்வது இல்லை என்றும் மீரா சோப்ரா கூறியுள்ளார்.
undefined
மேலும் தனக்கும் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதை வெளிப்படுத்தினால் எத்தனை பேர் ஆதரவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி என்பதால் அதனை வெளிப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.
undefined
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகும் எதுவும் மாறவில்லை. வேலையை தாண்டியும் பல விஷயங்கள் சினிமா துறையில் நடக்கின்றன என்றும், இதனால் ஏற்படும் மன அழுத்தம் தான் என்ற மன தவறான முடிவுகளை எடுக்க தோன்றுகிறது என தெரிவித்துள்ள இவர், சுயமரியாதை விட மன அமைதி முக்கியம் என கூறியுள்ளார்.
undefined
click me!