Nayanthara : திருப்பதியில் செஞ்ச அதே வேலையை கேரளாவிலும் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோஸ்

Published : Jun 14, 2022, 03:00 PM IST

Nayanthara : நடிகை நயன்தாரா, தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

PREV
14
Nayanthara : திருப்பதியில் செஞ்ச அதே வேலையை கேரளாவிலும் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோஸ்

நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

24

திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதிக்கு சென்றனர். அங்குள்ள ஏழுமலையான் கோவிலில் இருவரும் ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு போட்டோஷூட்டும் நடத்தினர். அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

34

பின்னர் அது தெரியாமல நடந்த ஒரு விஷயம் என்றும், வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

44

இந்நிலையில், நடிகை நயன்தாரா, தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரும் அவர் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். கேரள மாநிலத்தில் உள்ள செட்டிகுளங்கரா என்கிற பழமையான கோவிலுக்கு ஜோடியாக சென்ற இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்தனர். நடிகை நயன்தாரா சுடிதார் அணிந்து வந்திருந்த நிலையில் விக்னேஷ் சிவன் வேஷ்டி துண்டு என பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார்.

இதையும் படியுங்கள்... Prabhas :நயன்தாராவை தொடர்ந்து திருமணத்துக்கு தயாரான பிரபாஸ்.. பாகுபலி நாயகனை கரம்பிடிக்கப்போவது யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories