பிரபல நடிகை மியா ஜார்ஜ் வீட்டில் நடந்த மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

First Published Sep 22, 2021, 3:21 PM IST

தமிழில் 'அமரர் காவியம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார். இதை தொடர்ந்து மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மியா ஜார்ஜின் தந்தைக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் (75) செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21, 2021) அதாவது நேற்று கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் ஜோசப்பின் இறுதிச் சடங்குகள் கோட்டயம், 'பிரவிதானம் செயின்ட் மைக்கேல்ஸ் தேவாலயத்தில்' நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது இவருக்கு மினி என்கிற மனைவி மற்றும் மகள்கள் ஜிமி மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோர் உள்ளனர்.

சமீபத்தில் தான் நடிகை மியா ஜார்ஜிக்கு, அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டார். குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில், அவரது தந்தையின் உயிரிழப்பு மியாவின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை மியா ஜார்ஜ் சிறிய வயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, பின்னர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். இதில் கிடைத்த அறிமுகம் இவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு கொண்டு வந்தது. சில மலையாள படங்களில் நடித்த மியா பின்னர் தமிழில் நடிகர் ஆர்யா தயாரிப்பில், அவரது சகோதரர் கதாநாயகனாக அறிமுகமான 'அமரர் காவியம்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து தமிழில் சில ஹிட் படங்களிலும் நடித்தார்.

திரைப்பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், தன்னுடைய வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன மியா, அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் அழகிய குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மலையாளத்தில் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தன்னுடைய தந்தை மரணம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள மியா ஜார்ஜ் இது தன்னால் ஏற்று கொள்ள முடியாதது என, உருக்கமாக கூறியுள்ளார்.

click me!