அட்டகாரா என்கிற படத்தில் இணைந்து நடித்த போது, அந்த படத்தில் ஹீரோவாக நடித்த, நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் காதலிக்க துவங்கினர்.
undefined
இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டை சேர்ந்தவர்களும் பச்சை கொடி காட்டவே, மேக்னா ராஜியின் குடும்ப வழக்க படி கிறிஸ்துவ முறையிலும், சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்ப முறைப்படி இந்தி முறையிலும் திருமணம் செய்து கொண்டனர்.
undefined
இவர்களுடைய திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கன்னட திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த மணமக்களை வாழ்த்தினர்.
undefined
நடிகை மேக்னா ராஜ், தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர் திரு 420 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழைவிடகன்னட பட வாய்ப்புகள் அதிகம் வருவதால் கன்னட திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
undefined
திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தனர். சிரஞ்சீவி சர்ஜா, தற்போது நான்கு படத்திலும், மேக்னா ராஜ் 2 கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
undefined
கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, பிரபல கோலிவுட் முன்னணி நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகன் ஆவர்
undefined
இந்நிலையில் 39 வயதே ஆகும் சிரஞ்சீவி சர்ஜாவிற்கு திடீர் என மூச்சி திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஐசியு வில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
undefined
இந்நிலையில் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தார். திருமணமான இரண்டே வருடத்தில், பிரபல நடிகரும், நடிகையின் கணவருமான சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
undefined