மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கடந்த 2016-ம் ஆண்டு சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வந்தன.