சாம்ராட் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மனிஷா கொய்ராலா, பின்னர் சில ஆண்டிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதுதவிர புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, சிகிச்சைக்குபின் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தான் மதுவுக்கு அடிமையானது குறித்து பேசியுள்ளார் மனிஷா கொய்ராலா. அதில் அவர் கூறியதாவது : “கேமரா முன் தைரியமா நடிப்பதற்காக மது குடிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் அதுவே பழக்கமாக மாறிவிட்டது. மது அருந்தவில்லை என்றால் தூக்கமே வராது என்கிற அளவுக்கு மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். அந்த மதுப்பழக்கத்தால் எனது வாழ்க்கையும் நாசமானது. பின் புற்றுநோய் பாதிப்பால் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக்கொண்டேன்” என மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... துணிவு கெட்-அப்பில் அஜித்துக்கு சிலை வைத்த வெறித்தனமான ரசிகர் - வைரலாகும் போட்டோ